ருவாண்டாவில் ஏழு இலட்சம் ஆண்களுக்கு கருவளக்கேடு செய்யும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த
PRI முயற்சி
பிப்.12,2011. ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் ஏழு இலட்சம்
ஆண்களுக்கு கருவளக்கேடு செய்யும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்க ஐக்கிய
நாட்டு PRI என்ற மக்கள் தொகை ஆராய்ச்சி நிறுவனம் உறுதியளித்துள்ளது.
எய்ட்ஸ் நோயிலிருந்து
ருவாண்ட மக்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் அந்நாட்டு அரசு ஏழு இலட்சம் ஆண்களுக்கு விருத்தசேதனம்
செய்வதற்கு முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
அரசின் இந்நடவடிக்கையைக் கடுமையாய்
எதிர்த்துள்ளார் PRI அமைப்புத் தலைவர் ஸ்டீவென் மோஷர்