மதுபானங்கள் தொடர்புடைய இறப்புக்களைத் தடுப்பதற்கு அரசுகளுக்கு வேண்டுகோள்
பிப்.12,2011. உலகில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 25 இலட்சம் பேர் மதுபானங்கள் அருந்துவதால்
இறக்கும்வேளை, இவ்விறப்புக்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசுகள் ஆவன செய்யுமாறு WHO
எனும் உலக நலவாழ்வு நிறுவனம் கேட்டுள்ளது.
மதுபானங்கள் மற்றும் நலவாழ்வு குறித்த
உலகளாவிய நிலைமை குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், வளரும் நாடுகளில் மதுபானங்கள் அருந்துவது
இளைய தலைமுறைகள் மத்தியில் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
உலகில் இடம்
பெறும் இறப்புக்களில் சுமார் நான்கு விழுக்காடு மதுபானங்கள் தொடர்புடையவை.
காயங்கள்,
புற்றுநோய், மாரடைப்பு, குடல்புண் போன்ற வியாதிகள் இந்தவித இறப்புக்களுக்கு பெரும்பாலும்
காரணமாக இருக்கின்றன என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆண்கள் இறப்புக்களில் 6.2
விழுக்காடும், பெண்கள் இறப்புக்களில் 1.1 விழுக்காடும் மதுபானங்களோடு தொடர்புடைய நோய்களாகும்.
மதுபானங்களோடு
தொடர்புடைய நோய்களால் ஆண்டுதோறும் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 3,20,000 இளையோர் இறக்கின்றனர்.