பிப்.10,2011. அன்பர்களே, ஐபோன் என்ற நவீனக் கைத் தொலைபேசி வசதி மூலம் ஒப்புரவு அருட்சாதனத்தைப்
பெறுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. திருப்பீடப் பேச்சாளர்
இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தியும் ஒப்புரவு அருட்சாதனம் பற்றிய திருச்சபையின்
நிலைப்பாட்டை விளக்கினார். இந்த நவீனத் தொழிற்நுட்பம், அருட்பணியாளர் ஒருவரிடமிருந்து
நேரிடையாகச் சென்று பாவமன்னிப்புப் பெறும் நடைமுறைக்கு ஈடாக அமைந்துவிட முடியாது என்றார்.
அருட்பணியாளர் மதுரை ஆனந்த் அவர்களையும் இது தொடர்பாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.
இவர், நம்வாழ்வு கத்தோலிக்க வார இதழ் ஆசிரியர் மற்றும் இறையியல் பேராசிரியர்.