பிப்.08,2011. மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவில் முதிர்ச்சியடைந்த கருச் சோதனையைச்
சட்டப்படி அங்கீகரிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு அந்நாட்டுக் கத்தோலிக்க
ஆயர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பரிசோதனையில் மனிதக் கருவின்
உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பதற்கான எல்லா வழிவகைகளும் எடுக்கப்பட்டாலும்கூட அறநெறிப்படி
பார்க்கும் போது இது இனப்பெருக்கம் மற்றும் திருமண உறவின் மாண்புக்கு முரணாக இருக்கின்றது
என்றும் ஆயர்கள் குறை கூறினர்.
எனினும், கோஸ்ட்டா ரிக்கா அரசின் இந்த நடவடிக்கையில்
முதிர்ந்த மனிதக் கருக்கள் அழிக்கப்படும் நிலையும் இருப்பதால், மனிதர்கள், உயிரியல் பொருளாகக்
கருதப்படவும் கைவிடப்படவும் கொலை செய்யப்படவும் நாடு ஒத்துழைப்பதாய் இருக்கும் என்றும்
ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.
சுமார் 45 இலட்சம் மக்களைக் கொண்ட கோஸ்ட்டா ரிக்காவில்
83 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.