2011-02-08 15:34:13

ஏழை குழந்தைகளிடையேயான குருக்களின் சேவையை பாராட்டியுள்ளது ஆந்திர அரசு.


பிப் 08, 2011. ஆந்திர மாநிலத்தின் இரு மாவட்டங்களில் குழந்தை நல அமைப்புகளின் பொறுப்பாளர்களாக இரு குருக்களை அரசு நியமித்துள்ளது, தலத்திருச்சபையின் ஏழைக் குழந்தைகளிடையேயான பணிக்கான அங்கீகாரம் எனச் செய்தி நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

கிருஷ்ணா மாவட்டத்திற்கான குழந்தை நல அமைப்பின் பொறுப்பை குரு. தாமஸ் கோஷியிடமும் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கான இதே பொறுப்பை குரு தாமஸ் பள்ளிதானத்திடமும் ஒப்படைத்து ஆணை பிறப்பித்துள்ளது ஆந்திர அரசு. இப்பொறுப்பு மூன்றாண்டு கால அளவை உடையது.

விஜயவாடாவில் தெருவாழ் சிறார்களிடையே கடந்த 26 ஆண்டுகளாக பணியாற்றியுள்ள குரு. கோஷி, ஏற்கனவே இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து விருதைப் பெற்றுள்ளார்.

குரு பள்ளிதானமும் ஆந்திராவில் தலித் மக்களின் உரிமைகளுக்காக 24 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.