அமெரிக்க இளம் கத்தோலிக்கர் தங்களது கத்தோலிக்க விசுவாத்தைக் கைவிடவில்லை
பிப்.08,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1940கள் மற்றும் 1950களில் வாழ்ந்த இளம் வயதினரைப்
போன்று தற்போதைய இளம்வயதினர் திருச்சபையோடு உறவு கொண்டிருக்காவிடினும் அவர்கள் விசுவாசத்தைக்
கைவிடவில்லை என்று CNS கத்தோலிக்க செய்தி நிறுவனம் எடுத்த ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்கக்
கத்தோலிக்கக் கல்விக்கான Francis-Ann Curran மையமும், மதம் மற்றும் கலாச்சாரம் குறித்த
Fordham மையமும் இணைந்து நடத்திய கூட்டத்தில், இளம் கத்தோலிக்கர் தங்களது கத்தோலிக்க
விசுவாத்தையும் திருச்சபையுடனானத் தங்களது தொடர்பையும் பிரித்துப் பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருச்சபைத்
தலைவர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடத் தங்களுக்காகத் தாங்களே சிந்திப்பதற்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட வேண்டுமென்பதை அவர்கள் வலியுறுத்தியதாகவும் அக்கூட்டத்தில் கூறப்பட்டது.