2011-02-05 15:27:39

வத்திக்கான் உயிர்அறநெறியியல் குறித்த புதிய கையேட்டை வெளியிடவுள்ளது


பிப்.05,2011. உயிரணுக்கள் குறித்த ஆராய்ச்சி, இனப்பெருக்கத் தொழிற்நுட்பம் போன்ற உயிர்அறநெறியியல் விவகாரங்களில் வழிமுறைகளைக் கொண்ட புதிய கையேட்டை வெளியிடுவதற்கு திருப்பீட நலவாழ்வுத்துறைத் தயாரித்து வருகிறது.

இந்தக் கையேடு குறித்துப் பேசிய திருப்பீட நலவாழ்வுத்துறைச் செயலர் ஆயர் José Redrado, நலவாழ்வுப் பணியாளர்கள், மரணக் கலாச்சாரத்திற்கு எதிராய்ச் செயல்படுவதற்கு இக்கையேடு உதவும் என்றார்.

மேலும், எய்ட்ஸ் நோய்க் குறித்த ஒருநாள் கருத்தரங்கு வருகிற மே 28ம் தேதி நடைபெறும் என்றும், எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் பணியாற்றும் கத்தோலிக்க நலவாழ்வுப் பணியாளர்களுக்கென உதவும் கையேடு ஒன்று அதன் முடிவி்ல வெளியிடப்படும் என்றும் திருப்பீட நலவாழ்வுத்துறையின் நேரடிப் பொதுச் செயலர் பேரருட்திரு Jean-Marie Mpendawatu கூறினார்

இந்த மே கருத்தரங்கு, வருகிற ஜூலை 17 முதல் 20 வரை உரோமையில் நடைபெறும் எய்ட்ஸ் குறித்த ஆறாவது சர்வதேச கருத்தரங்கிற்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.