2011-02-05 15:26:46

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இவ்வாண்டு தபக்காலத் தியானம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பற்றிய சிந்தனைகளையும் உள்ளடக்கியிருக்கும்


பிப்.05,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உட்பட திருப்பீடத் தலைமையக அதிகாரிகளின் இவ்வாண்டு தபக்காலத் தியானம் மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பற்றிய சிந்தனைகளையும் உள்ளடக்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கானில் வருகிற மார்ச் 13 முதல் 19 வரை நடைபெறும் இந்த ஆன்மீகத் தியானம், “திருச்சபையின் இதயத்தில் கிறிஸ்துவின் ஒளி- திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மற்றும் புனிதர்களின் இறையியல்” என்ற தலைப்பில் இடம் பெறும்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருப்பீடத் தலைமையக உறுப்பினர்கள் மற்றும் பிறத் திருச்சபை அதிகாரிகள் செய்யும் இவ்வாண்டுத் தியானத்தை கார்மேல்சபை அருட்தந்தை François-Marie Léthel வழிநடத்துவார். ப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இவர், தெரேசியானம் பாப்பிறை இறையியல் மற்றும் ஆன்மீகப் பல்கலைகழகத்தில் பேராசிரியராவார்







All the contents on this site are copyrighted ©.