2011-02-05 15:29:45

ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனம் : எகிப்தில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு கைதானவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுகோள்


பிப்.05,2011. எகிப்தில் இடம் பெறும் அதிர்ச்சியூட்டும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலர்களும் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு ஐ.நா. மனித உரிமைகள் நிறுவன உயர் இயக்குனர் நவநீதம்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போராட்டதாரர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து பாதுகாக்கப்படுவது உட்பட மொத்தத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு ஜெனீவாவில் நிருபர் கூட்டத்தில் கூறினார் நவநீதம்பிள்ளை .

அரசுகள் தங்கள் மக்களுக்குச் செவிமடுத்து அவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்று நவநீதம்பிள்ளை மேலும் கூறினார்








All the contents on this site are copyrighted ©.