ஆப்கான் அகதிகள் குறித்த ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைக்கு ஆயர்கள் பாராட்டு
பிப்.05,2011. ஆஸ்திரேலியாவில் ஆப்கான் அகதிகள் குறித்து ஆஸ்திரேலிய அரசுக்கும் ஆப்கானிஸ்தான்
அரசுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள புதிய உடன்பாட்டை வரவேற்றுள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.
அகதிகளை
நாட்டை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றும் கடுமையான கொள்கைகள் தளர்த்தப்படும் என்ற நம்பிக்கையையும்
ஆஸ்திரேலிய ஆயர்களின் அகதிகள் மற்றும் குடியேற்றதாரர் அலுவலகம் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானில்
கடும் அடக்குமுறைக்கு உள்ளாகும் அந்நாட்டு ஹஜாரா சிறுபான்மை சமூகம், சட்டரீதியான அகதிகள்
நிலையைக் கொண்டிராமல் இருந்தாலும், அவர்கள் ஆஸ்திரேலியாவை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்படமாட்டார்கள்
என்று தான் நம்புவதாகவும் அந்த அலுவலகம் கூறியது