2011-02-04 17:14:30

திருத்தந்தை ஐந்து புதிய ஆயர்களுக்குத் திருப்பொழிவு


பிப்.04,2011. இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் ஐந்து புதிய ஆயர்களுக்குத் திருப்பொழிவு வழங்குவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

பாகிஸ்தானுக்கானப் புதிய தூதர் பேருட்திரு எட்கர் பேனா பாரா, திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத்தின் புதிய செயலர் சீனரான ஹாங்காங்கின் பேருட்திரு சாவியோ ஹோன் தாய்ஃபாய், இந்தோனேசியாவுக்கானத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள 48 வயது பேருட்திரு அந்தோணியோ குய்தோ ஃபிலிப்பாட்சி, திருப்பீட புனிதர்கள் பேராயச் செயலர் பேருட்திரு மார்ச்செல்லோ பார்த்தோலூச்சி, திருப்பீட குருக்கள் பேராயச் செயலர் பேருட்திரு செல்சோ மோர்கா ஆகிய ஐந்து பேருக்குத் திருப்பொழிவு வழங்குவார் திருத்தந்தை

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி 5 ஆயர்களுக்கும் 2009ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி 5 ஆயர்களுக்கும் திருப்பொழிவு வழங்கியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.