இந்தியத் திருச்சபை தைரியமாக இருக்குமாறு திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதி அழைப்பு
பிப்.04,2011. இந்தியத் திருச்சபை நாட்டின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதத்தினரோடு
மேற்கொண்டு வரும் உரையாடலை விட்டுவிடாமல் ஏழைகள் மத்தியிலான பணியையும் தொடர்ந்து செய்யுமாறு
வத்திக்கான் பிரதிநிதி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம்
ஜான் பாலின் சமூகப் போதனைகள் என்ற தலைப்பில் புது டில்லியில் இவ்வியாழனன்று நடைபெற்ற
கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் கோர்மாக் மர்ஃபி ஒக்கானர், பயப்படாமல் தைரியத்துடன்
செயல்படுமாறும் கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1986ம் ஆண்டு இந்தியாவில்
மேற்கொண்ட முதல் திருப்பயணத்தின் 25ம் ஆண்டு நினைவைக் கொண்டாடத் திருத்தந்தையின் சிறப்புப்
பிரதிநிதியாக தற்போது இந்தியாவில் பத்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இங்கிலாந்து
கர்தினால் ஒக்கானர்.
இம்மாதம் 11ம் தேதி உரோம் திரும்பு முன்னர் இராஞ்சி, கல்கத்தா,
கொச்சின், மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறும் விழா நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார்.
மறைந்த
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் உருவச் சிலையையும் அவர் இப்புதனன்று
திறந்து வைத்தார்.