தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவின்
Maracaiboவில் 1960ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி பிறந்த பேராயர் Edgar Peña Parra, 1985ம்
ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
திருச்சபை சட்டத்தில்
முனைவர் பட்டமும் சர்வதேச சட்டத்தில் சிறப்புப் பயிற்சியும் பெற்றிருக்கும் இவர், கென்யா,
யூக்கோஸ்லாவியா, சுவிட்சர்லாந்து, ஹொண்டுராஸ், மெக்சிகோ ஆகிய நாடுகளில் திருப்பீடத் தூதரகங்களில்
பணியாற்றியிருக்கிறார்.
பாகிஸ்தானுக்கானப் புதியத் திருப்பீடத் தூதராக நியமனம்
பெற்றுள்ள பேராயர் Edgar Peña Parraவுக்கு, ஸ்பானியம், இத்தாலியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச்,
போர்த்துக்கீசியம், செர்போ-குரோவேஷியம் ஆகிய மொழிகள் தெரியும்