2011-02-02 15:20:48

இளையோர் மேற்கொள்ளவிருக்கும் இலட்சக்கணக்கான நிமிடங்கள் மௌனம்


பிப்.02,2011. இளையோர் தாங்கள் வாழும் சமுகங்களில் தங்களைப் பாதிக்கும் விவகாரங்கள் பற்றிப் பேசி நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக, மூன்று இலட்சத்து 78 ஆயிரம் நிமிடங்கள் மௌனம் அனுசரிப்பதற்கு அவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.

ஒரு பிரிட்டன் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இளையோர் இவ்வாறு உறுதி எடுத்துள்ளனர்

இளையோரும் அவர்கள் மீது அக்கறை கொண்டோரும் சமுதாயத்தால் மௌனமாக்கப்பட்டுள்ள பிற இளையோருடன் தோழமையுணர்வில் அமைதியில் அமர்ந்து சிந்திப்பதற்கு இந்த இலட்சக்கணக்கான நிமிட மௌனம் உதவும் என்று அவ்வமைப்பு கூறியது.

திருத்தந்தையின் பிரிட்டனுக்கானத் தி்ருப்பயணத்தின் போது இளையோர் சார்பாக உரையாற்றிய Pascal Uche இந்நடவடிக்கையில் முக்கியமான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது








All the contents on this site are copyrighted ©.