2011-02-01 16:02:30

பாகிஸ்தான் ஆயர்கள்:நாட்டு விவகாரங்களிலிருந்து மதம் பிரிக்கப்படுவது இன்றியமையாதது


பிப்.01,2011. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு, நாட்டில் “மனச்சான்று மற்றும் பேச்சு சுதந்திரம்” அனுமதிக்கப்படுமாறு தலத்திருச்சபை மற்றும் தன்னார்வ மனித உரிமை அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.

நாட்டு விவகாரங்களிலிருந்து மதம் பிரிக்கப்படுவது இன்றியமையாதது என்று வலியுறுத்திய பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம், பத்தரிகையாளர், குறிப்பாக அரசியல் பணியாளர்கள் குறிவைத்துக் கொல்லப்படுவது மற்றும் நீதிமன்றத்தால் தீர்ப்பிடப்படுவது குறித்தத் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் ஆளுனர் சல்மான் தசீர் கொலை செய்யப்பட்டதன் நாற்பதாம் நாளைக் கடைபிடித்த அதேநாளில், நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், தேவநிந்தனை சட்டங்களுக்கு ஆதரவாகப் பேரணியை நடத்தினர்.

பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டங்கள் தொடர்பான வன்முறையில் 1392 பேர் கொல்லப்பட்டுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.