லூனார் புதிய ஆண்டைச் சிறப்பிக்கவிருக்கும் நாடுகளுக்குத் திருத்தந்தை வாழ்த்து
சன.31,2011. லூனார் புதிய ஆண்டைச் சிறப்பிக்கவிருக்கும் தூர கிழக்கு நாடுகளுக்குத் தனது
நல்வாழ்த்துக்களையும் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை.
இவ்விழா
நாள், குடும்பங்களில் ஒன்றிப்பை ஏற்படுத்துகின்றது என்று சொல்லி, அனைவரும் அமைதியுடனும்
வளமையுடனும் வாழ்வதற்குத் தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களையும் கூறினார் திருத்தந்தை.
லூனார்
புதிய ஆண்டு, சீனர்களுக்கு மிக முக்கியமான விடுமுறை நாளாகும். வியட்நாம், கொரியா உட்பட
ஆசியாவின் சில நாடுகளில் இப்புத்தாண்டு சிறப்பிக்கப்படுகிறது