2011-01-31 15:38:02

திருத்தந்தை : புனித பூமியில் அமைதி ஏற்படுவதற்குத் தெளிவான திட்டங்கள் தேவை


சன.31,2011. ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், புனித பூமியில் அமைதியைக் கொண்டு வருவதற்கானத் திட்டங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார் திருத்தந்தை.

சனவரி கடைசி ஞாயிறு, புனித பூமியில் அமைதி ஏற்படுவதற்காகச் செபிக்கும் சர்வதேச நாளாகக் கடைபிடிக்கப்பட்டதையொட்டிப் பேசிய திருத்தந்தை, அப்பகுதியில் அமைதி ஏற்படுவதற்குத் தெளிவான திட்டங்கள் தேவை என்பதையும் வலியுறுத்தினார்.

இந்தச் சர்வதேச நாளையொட்டி இத்தாலியக் கத்தோலிக்கக் கழகத்தின் ஒரு சிறுவனும் சிறுமியும் திருத்தந்தையின் அருகில் நின்று அவரோடு சேர்ந்து அமைதியின் அடையாளமாக இரண்டு மாடப் பூறாக்களைப் பறக்கவிட்டனர். இளையோரின் அமைதிக்கான அர்ப்பணத்திற்கும் இவர்கள் திருத்தந்தையிடம் உறுதி கூறினர்.

இன்னும், இஞ்ஞாயிறன்று உலக தொழுநோயாளர் தினம் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு அந்நோயாளிகளுடனானத் தனது தோழமையுணர்வையும் தெரிவித்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.