2011-01-29 15:49:21

கர்நாடகாவில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைத் தாக்குதல்கள் குறித்த விசாரணை அறிக்கை நியாயமற்றது, அகில இந்தியக் கிறிஸ்தவர்கள் அவை


சன. 29,2011. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற பொறுப்பான உள்ளூர் அரசு, காவல்துறை, இந்து தீவிரவாதக் குழுக்கள் ஆகியோரைக் குற்றத்திலிருந்து விலக்கியிருக்கும் அறிக்கை குறித்து கிறிஸ்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முன்னாள் நீதிபதியான B.K. Somashekhara நடத்திய விசாரணையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2008ம் ஆண்டு செப்டம்பரில் சுமார் 30 கோவில்கள் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டதிற்கு தவறாக வழிநடத்தப்பட்ட தீவிரவாதக் கும்பலே காரணம் என்றும் உண்மையான இந்துக்கள் பொறுப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த விசாரணை நியாயமற்றது என்று கூறிய அகில இந்திய கிறிஸ்தவர்கள் அவை, அதனை நிராகரிக்குமாறு கோரியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.