2011-01-28 15:58:49

தென் கொரிய காரித்தாஸ் வட கொரியாவுக்கு மனிதாபிமான உதவிகள்


சன.28,2011. தென் கொரிய கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம், வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து வட கொரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கொரிய ஆயர்களின் அதிகாரப்பூர்வமான முதல் வெளிநாட்டு நிவாரண நிறுவனமான சர்வதேச கொரிய காரித்தாஸ், வட கொரியாவில் மிகவும் நலிந்த சிறார், பெண்கள், முதியோர் ஆகியோர்க்கெனப் பத்து இலட்சம் டாலர் மதிப்பிலான உதவிகளை அனுப்பும்.

கடந்த நவம்பரில் வட கொரியா, தென் கொரியத் தீவில் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்து, தென் கொரிய அரசு வட கொரியாவுடனானப் பரிமாற்றத்திற்குத் தடை விதித்திருந்தது. தற்சமயம் அத்தடை இலேசாகத் தளர்த்தப்பட்டு வருகிறது என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன







All the contents on this site are copyrighted ©.