2011-01-28 15:57:58

சென்னையில் புத்தமதக் கோயில் தாக்கப்பட்டுள்ளது குறித்து இலங்கை பல்சமயத் தலைவர்கள் கண்டனம்


சன.28,2011. சென்னையில் ஸ்ரீ மகபோதி புத்தமதக் கோயில் தாக்கப்பட்டு நான்கு புத்தத் துறவிகள் காயமடைந்து இருப்பது குறித்தத் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் இலங்கை பல்சமயத் தலைவர்கள்.

சென்னை புத்தமதக் கோயில் பல்சமய நல்லிணக்கத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் என்று குறிப்பிட்டுள்ள இலங்கை கிறிஸ்தவ, புத்த, இந்து மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்கள், இத்தாக்குதலு்க்கு எதிரானத் தங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மக்கள் அமைதி காத்து புத்தத் துறவிகள் குணமடைவதற்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார் கொழும்புக் கத்தோலிக்கக் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

எண்பது ஆண்டுகள் பழமையுடைய சென்னை ஸ்ரீ மகபோதி புத்தமதக் கோவிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 12 இலட்சம் பயணிகள் செல்கின்றனர்

இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் பிடிபட்டுவிடுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இலங்கைத் துணைத்தூதுரகம், மஹாபோதி சங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது








All the contents on this site are copyrighted ©.