சன.27,2011. அன்பர்களே, இலங்கையில் அண்மையில் பெய்த கனமழையால் கிழக்குப் பகுதி மக்கள்
மிகவும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்குக் காரித்தாஸ் நிறுவனம் செய்து வரும் பணிகள் பற்றி
விளக்குகிறார் அ.பணி.ஜார்ஜ் சிகாமணி. இலங்கை காரித்தாஸ் நிறுவன இயக்குனரான இவர் வத்திக்கான்
வானொலிக்கு வருகை தந்து காரித்தாசின் வெள்ள நிவாரணப் பணிகளை விளக்கினார்