'இன்றையச் சூழலில் கற்புடன் வாழ்தல்' - இளையோருக்கு கானடா ஆயர்கள் அழைப்பு.
சன.27,2011.'இன்றையச் சூழலில் கற்புடன் வாழ்தல்' என்ற தலைப்பில் இளையோருக் கான மேய்ப்புப்பணி
சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் கானடா ஆயர்கள்.
கற்புடன் வாழ்தல் என்பது ஓர்
உண்மையான மிகப்பெரும் சவாலாக, குறிப்பாக இளையோருக்கு இருக்கும் இக்காலத்தில், அத்தகையச்
சவாலை எதிர்நோக்கி கற்புடன் வாழ போராடும் இளையோருக்காக தாங்கள் செபிப்பதுடன் அவர்களுக்கான
ஊக்கத்தை எப்போதும் வழங்குவதாகவும் ஆயர்கள் அச்சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
செபம்,
ஒப்புரவு எனும் அருட்சாதனம், ஆன்மீக வழிகாட்டுதலின் தேவை ஆகியவைகளின் முக்கியத்துவம்
குறித்தும் இளையோருக்கு அதில் எடுத்துரைத்துள்ளனர் கானடா ஆயர்கள்.
இயேசு கிறிஸ்துவில்
இறைவனின் கொடைக்கு பதில் வழங்கும் விதமாக ஒருவர் தன்னையே வழங்குவதே கற்பு நிலை எனக்கூறும்
ஆயர்கள், இது குறித்த திருத்தந்தை 16ம் பெனடிக்டின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டியுள்ளனர்.