யாழ்ப்பாண பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர விண்ணப்பிக்கிறார் ஆயர்.
சன 25, 2011. இலங்கையின் வடபகுதியில் பரவி வரும் திகிலூட்டும் பயங்கர வாத நடவடிக்கைகளை
முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என அப்பகுதியின் உயர்மட்ட ராணுவத் தலைமைக்கு விண்ணப்பம்
ஒன்றை விடுத்துள்ளார் யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம்.
யாழ்ப்பாண பாதுகாப்புப்
படையின் உயர் தளபதி ஹத்துருசிங்கேயை யாழ்ப்பாண செயலகத்தில் சந்தித்து இவ்விண்ணப்பத்தை
விடுத்த ஆயர், வன்முறை என்பது அதிகரித்து மக்கள் அச்சத்திலும் நிச்சயமற்ற ஒரு நிலையிலும்
வாழ்ந்து வருவதால், உடனடி நடவடிக்கையின் தேவையை வலியுறுத்தினார்.
யாழ்ப்பாண பகுதியில்
50,000 ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், கொலைகள், ஆள்கடத்தல்கள், கொள்ளைகள் போன்றவை
அதிகரித்தே வருவதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.