2011-01-22 15:55:10

குடியேற்றதாரர் மறைப்பணியாளருக்கு நற்செய்தி அறிவிப்பும் பிறரன்பும் இரண்டு முக்கிய அம்சங்கள் - வத்திக்கான் அதிகாரி


சன.22,2011. மூன்றாம் மில்லென்யத்தில் குடியேற்றதாரர் மத்தியில் வேலை செய்யும் மறைப்பணியாளருக்கு நற்செய்தி அறிவிப்பும் பிறரன்பும் இரண்டு முக்கிய அம்சங்களாக இருக்கின்றன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.

போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் மேய்ப்புப்பணியாளர்க்கு நடைபெற்ற பயிற்சிப் பாசறையில் உரையாற்றிய திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் பேராயர் அந்தோணியோ மரிய வெலியோ, ஐரோப்பாக் கண்டம் தற்சமயம் கிறிஸ்தவத்தை அதிகம் இழந்து வருகிறது என்றார்.

அதேசமயம், பல மதங்களிலிருந்து குடியேற்றதாரர் பெருமளவில் ஐரோப்பாவில் குடியேறி வருகின்றனர் என்று பேராயர் கூறினார்.

எனவே திருச்சபை இறைவனின் அன்புக்குச் சாட்சியாக வாழவேண்டிய நிலையில் இருக்கின்றது என்றும் கூறிய பேராயர், மனித வியாபாரம், மனித உறுப்புகள் விற்பனை ஆகியவை குறித்த பிரச்சனைகளையும் குறிப்பிட்டார்







All the contents on this site are copyrighted ©.