2011-01-21 15:46:49

திருத்தந்தை: இறையன்பில் மனிதன் தனது மாண்பை மிக ஆழமாகக் கண்டுணருகிறான்


சன.21,2011: இறைவன் மனிதன்மீது கொண்டிருக்கும் மிகுந்த பேரன்பில் மனிதன் தனது மாண்பை மிக ஆழமாகக் கண்டுணருகிறான் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இக்காலத்தில் வாழ்க்கையின் பல கூறுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஒரு விதத்தில் நல்லதே, ஏனெனில் இது மனிதனின் எண்ணத்திலும் வரலாற்றின் செயல்களிலும் மனிதன் மற்றும் அவனது மாண்பை முன்னிறுத்தச் செய்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

உரோம் பொதுப் பாதுகாப்புப் பணித்துறையின் சுமார் 1200 பேரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்கால நவீனச் சிந்தனைகளில் மனச்சான்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது குறைந்து வருவது குறித்த கவலையையும் தெரிவித்தார்.

ஓர் ஆரோக்யமான பொது வாழ்வுக்கும் கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் இடையே நல்லதொரு தொடர்பு இருப்பதற்கு, உரோம் மாநகர அதிகாரிகள் நல்லதோர் எடுத்துக்காட்டாய்த் திகழுமாறு திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.