2011-01-21 15:56:27

கிறிஸ்தவ மறைசாட்சிகள் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கானப் பாதையைக் காட்டுகிறார்கள்


சன.21,2011: கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்கள் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்களாய் இருந்த போதிலும் அவர்கள் அனைத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒன்றிப்பு உருவாக மிகுந்த சக்தி வாய்ந்த சாட்சிகளாக இருக்கிறார்கள் என்று திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கூறினார்.

கிறிஸ்தவ மறைசாட்சிகள் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கானப் பாதையைக் காட்டுகிறார்கள் என்றுரைத்தத் திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch, மறைசாட்சிகளுக்கிடையே நிறைவான ஒன்றிப்பைக் காண்கிறோம் என்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.

மறைசாட்சிகள் முன்வைத்துள்ள எடுத்துக்காட்டான வாழ்வு, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கானக் கிறிஸ்தவர்களின் செபத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்றார் கர்தினால் கோச்.

கிறிஸ்தவ சபைகள் சனவரி 18 முதல் 25 வரை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைக் கடைபிடித்து வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.