2011-01-18 14:36:31

இந்திய நாட்டில் அமைதி மற்றும் இணக்க வாழ்விற்கான கத்தோலிக்க இளைஞர்களின் பணி.


சனவரி 18,2011. இந்திய நாட்டில் அமைதி மற்றும் இணக்க வாழ்விற்காக ஒன்றிணைந்து உழைக்க உள்ளதாக அண்மையில் நிறைவுற்ற இந்திய கத்தோலிக்க இளைஞர்களின் மூன்று நாள் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டது.

இளைஞர்களுக்கான இந்த சர்வதேச ஆண்டில் மஹராஷ்டிராவின் அம்ராவதியில் கூடிய 125 கத்தோலிக்க இளைஞர்கள், பன்மைத் தன்மைகளில் ஐக்கியம் என்பதைக் குறித்து விவாதித்தனர். இந்திய நாட்டில் உள்ள பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் குறித்து புரிந்து கொண்டு, இளைஞர்கள் நாட்டின் அமைதிக்காக உழைக்கவேண்டும் என்பதை மனதிற்கொண்டதாய் இந்த மூன்று நாள் இளைஞர் கருத்தரங்கு நடத்தப்பட்டதாக இதற்கு ஒருங்கிணப்பாளராகச் செயல்பட்ட அருட்சகோதரி சங்கீதா பெரைரா கூறினார்.

குழந்தைகளுக்கு கத்தோலிக்க மதிப்பீடுகளை வழங்கவேண்டியதன் அவசியம் இந்த இளைஞர் கருத்தரங்கில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.