2011-01-15 13:17:37

பிரேசிலில் வெள்ளத்தால் பாதிக்கப்ப்டடுள்ள மக்களுக்கு ஆயர்கள் உதவி


சன.15,2011. பிரேசில் நாட்டில் இடம் பெற்று வரும் கடும் வெள்ளத்தில் 500க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளவேளை, இவ்வெள்ளத்தால் பாதிக்கப்ப்டடுள்ள மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றனர் அந்நாட்டு ஆயர்கள்.

தென்கிழக்குப் பிரேசிலில் கனமழை பெய்ததால் ஆறுகள் கரைபுரண்டோடுகின்றன மற்றும் மண்சரிவுகளும் ஏற்பட்டு வீடுகள் புதைந்துள்ளன. Rio de Janeiro, Sao Paulo, Espirito Santo,Minas Gerais ஆகிய மாநிலங்களில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்ப்டடுள்ளனர்.

இம்மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பணியில் இறங்கியுள்ளனர் ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.