திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் சவப்பெட்டி வத்திக்கான் பசிலிக்காவிற்கு இடமாற்றம்
சன.15,2011. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் அடிநிலக்கல்லறையில் வைக்கப்பட்டுள்ள
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் உடல்கொண்ட சவப்பெட்டி பசிலிக்காவிற்கு இடமாற்றம்
செய்யப்படவிருப்பதாக அறிவித்துள்ளது வத்திக்கான்.
சவப்பெட்டியிலிருந்து திருத்தந்தை
இரண்டாம் ஜான் பால் அவர்களின் உடலை வெளியே எடுக்காமல் அந்தப் பெட்டி இடமாற்றம் செய்யப்படும்
என்று திருப்பீடச் சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ அறிவித்தது.
வத்திக்கான்
பசிலிக்காவில் பியத்தா சிற்றாலயத்துக்கும் திருநற்கருணை சிற்றாலயத்துக்கும் இடைப்பட்ட
பகுதியில் அமைந்துள்ள புனித செபஸ்தியான் சிற்றாலயத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலுடைய
சவப்பெட்டி வைக்கப்படும் எனவும் அத்தினத்தாள் கூறியது.
இந்தச் சிற்றாலயத்தில்
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 11ம் இன்னோசென்ட்டின் (1676-1689) உடல் பகுதிகள் ஏற்கனவே
வைக்கப்பட்டுள்ளன. இவ்வாலயப் பீடத்தின் இரண்டு பக்கங்களிலும் திருத்தந்தையர் 11ம் பத்திநாதர்,
12ம் பத்திநாதர் ஆகியோரின் திருவுருவங்கள் அமைந்திருக்கின்றன.