திருத்தந்தை : வத்திக்கான் பாதுகாப்புப் பணியாளர்கள் “காவல்தூதர்கள்” போன்றவர்கள்
சன.15,2011. புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக வத்திக்கான் பாதுகாப்புப்
பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை
16ம் பெனடிக்ட், ஏறக்குறைய “காவல்தூதர்கள்” போன்ற இவர்களது பணிக்குத் தனது நன்றியைத்
தெரிவித்தார்.
வத்திக்கானை இரவு பகலாகப் பாதுகாத்து வரும் இவர்களைப் பாராட்டிய
திருத்தந்தை, பொது ஒழுங்கு முறைகளைப் பாதுகாப்பதிலும் இங்கு வரும் திருப்பயணிகளுக்குச்
சேவை செய்வதிலும் மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடனும் செயல்படும் இவர்களது பணி உண்மையிலேயே
முக்கியமானது என்றார்.
இந்தப் பணியானது இவர்கள் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்தில்
ஆழப்படவும் அதற்கு மகிழ்ச்சியோடு சான்று பகரவும் உதவுவதாக இருக்கட்டும் என்ற தனது வாழ்த்தையும்
தெரிவித்தார் திருத்தந்தை.