2011-01-14 15:32:23

புனித பூமிக் கிறிஸ்தவர்களுக்கு உதவ பன்னாட்டு ஆயர்கள் குழு மீண்டும் உறுதி


சன.14,2011. ஐந்தாவது நற்செய்தி என்றழைக்கப்படும் புனித பூமிக் கிறிஸ்தவச் சமூகங்களுக்கானத் தங்களது ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளது பன்னாட்டு ஆயர்கள் குழு ஒன்று.

திருப்பீடத்தின் வேண்டுகோளின் பேரில் புனித பூமிக் கிறிஸ்தவர்க்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில், கானடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளின் ஆயர் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு 1998ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

புனித பூமிக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது இக்குழு.

புனித பூமிக் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை உணருமாறும் அப்பகுதியில் அமைதி இடம் பெற தொடர்ந்து உழைக்குமாறும் சர்வதேச சமுதாயத்தையும் இந்தக் குழு கேட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.