சன.14,2011. இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் பரவலாக இடம் பெறும் ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை
அகற்றுவதற்கு மறைக்கல்வியில் புதுப்பித்தல் தேவை என்று இந்திய ஆயர்கள் கூறினார்.
சென்னையில்
இப்புதனன்று நிறைவு பெற்ற CCBI யின் 23வது கூட்டத்தில் கலந்து கொண்ட 120க்கும் மேற்பட்ட
ஆயர்கள் இவ்வாறு அழைப்பு விடுத்தனர்.
இன்றைய இந்தியத் திருச்சபைக்கு மறைக்கல்வியில்
புதுப்பித்தல் இடம் பெறுவது மிகவும் இன்றியமையாதது என்று கூறிய ஆயர்கள், குருக்களும்
துறவிகளும் பொதுநிலையினரும் தங்களது வாழ்க்கை மற்றும் வார்த்தைகள் வழியாக மறைக்கல்வியாளர்களாகச்
செயல்பட அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
CCBI
யின் புதிய தலைவராக கர்தினால் டெலஸ்போர் டோப்போவும் உதவித் தலைவராக கோவா பேராயர் பிலிப்நேரியும்
பொதுச் செயலராக கண்ணூர் ஆயர் வர்கீஸ் சக்கலக்கல்லும் இந்தக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்