ஹெயிட்டி நிலநடுக்கத்தின் ஆண்டு நிறைவையொட்டி திருத்தந்தை அனுப்பிய செய்தி
சன.12, 2010. ஹெயிட்டியில் கடந்த ஆண்டு சனவரி 12ம் நாள் நடந்த பெரும் நிலநடுக்கத்தின்
ஆண்டு நிறைவு நாளான இப்புதனன்று திருத்தந்தை அந்நாட்டு மக்களுக்கு தன் செபம் நிறைந்த
செய்தியை அனுப்பினார். இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், முக்கியமாக,
இதனால் உயிரிழந்த அனைவருக்கும் தன் செபங்களை எழுப்புவதாகத் திருத்தந்தை கூறியுள்ளார். மிகவும்
கடினமான சூழல்களில் தொடர்ந்து வாழும் அம்மக்கள் மனம் தளராமல் இருக்கவும், அந்நாட்டின்
கட்டிடங்கள் மட்டுமல்லாமல், அந்நாட்டின் சமுதாயமும் பலவழிகளில் கட்டியெழுப்பபடவேண்டும்
என்ற அவசியத்தையும் தன் செய்தியில் கூறியுள்ளார்.தனது சார்பில் ஹெயிட்டியில் இருக்கும்
Cor Unum அவையின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா வழியாக தான் அம்மக்களுடன் இருப்பதாகக்
கூறியத் திருத்தந்தை, அந்நாட்டு மக்களை ஹெயிட்டியின் பாதுகாவலரான இடைவிடா சகாய அன்னையின்
பராமரிப்பில் தான் ஒப்படைப்பதாகவும் தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.