2011-01-11 15:21:58

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி தமிழகத்தில் ஆலோசனை


சன 11, 2011. தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜோதி ஜெகராஜன் தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அனைத்துத் துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட

இக்கூட்டத்தில் பேசிய செயலர் ஜோதி ஜெகராஜன், "தமிழகத்தில் 14 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் கல்வி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்தி, கருத்துக்களை கேட்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பின், சட்டத்திற்குத் தேவையான விதிமுறைகளை வகுக்கலாம்' எனவும் கூறினார்.

மாவட்ட அளவில் ஆய்வுக் கூட்டங்களை நடத்துதல், அதன் மூலம் கருத்துக்களைப் பெறுதல் போன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து கவனிக்கும் பொறுப்பு, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.