2011-01-10 14:13:51

பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி


சன.10,2011. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் ஐம்பதாயிரம் பேர் கராச்சியில் இஞ்ஞாயிறன்று மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

இந்தப் பேரணி சில காலத்திற்கு முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் இம்மாதம் 4ம் தேதி பஞ்சாப் ஆளுனர் சல்மான் தசீர் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் முறையிலும் நடத்தப்பட்டது.

மேலும் வன்முறையைத் தூண்டுவதற்குக் காரணம் ஏற்படாத விதத்தில் கிறிஸ்தவர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு உள்ளூர் திருசசபைத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இன்னும், இஞ்ஞாயிறன்று பாகிஸ்தான் திருச்சபை தேசிய அளவில் சிறுபான்மையினர் செப நாளையும் கடைபிடித்தது. ஆளுனர் தசீருக்கானச் சிறப்புச் செபங்களும் நடத்தப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.