சன.10,2011. திருமுழுக்குத் திருவருட்சாதனத்தைப் பெற்றிருப்பதன் அழகையும் மாபெரும் கடவுளின்
குடும்பத்திற்கு உரியவர்கள் என்பதையும் விசுவாசிகள் மீண்டும் கண்டுணருமாறு திருத்தந்தை
அழைப்பு விடுத்தார்.
இயேசுவின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறன்று பகல் 12 மணிக்கு
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, திருமுழுக்குப்
பெற்றுள்ள விசுவாசிகள் தங்களது விசுவாசத்திற்கு மகிழ்ச்சியுடன் சான்று பகருமாறும் கேட்டுக்
கொண்டார்.
தூய ஆவி, மனிதன் திருச்சபையின் உதரத்திலிருந்து மீண்டும் பிறக்கச் செய்கிறார்
என்றும் தூயஆவியின் தண்ணீரால் மீண்டும் பிறக்கும் மகிழ்ச்சியில் முழு சமூகமும் பங்கு
கொள்வார்களாக என்றும் அவர் தெரிவித்தார்.