2011-01-10 14:15:37

கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட பிரிட்டன் பேராயர் அழைப்பு


சன.10,2011. கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணியில் மிக ஆழமாகத் தங்களை அர்ப்பணிக்குமாறு பிரிட்டன் பேராயர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

இம்மாதம் 18 முதல் 25 வரை கிறிஸ்தவ சபைகள் கடைபிடிக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்ட கிலாஸ்கோ பேராயர் Mario Conti, கடந்த முப்பது ஆண்டுகளில் இம்முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ சபைகள் ஒருவர் ஒருவரை மதித்து நட்புடன் வாழவும் கேட்டுக் கொண்ட பேராயர் Conti, இம்முயற்சி செபத்தினால் ஊட்டம் பெறுகிறது என்றும் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.