தென் சூடான் பொது மக்கள் கருத்து வாக்கெடுப்புக் கண்காணிப்புக் குழுவில் தென்னாப்ரிக்க
கர்தினால்
சன.08,2011. தென் சூடான் குறித்து இஞ்ஞாயிறன்று தொடங்கும் பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பைக்
கண்காணிப்பதற்குத் தென்மண்டல ஆப்ரிக்க ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் வில்பிரட் நாப்பியெர்
அந்நாடு சென்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் சூடான் தனிநாடாக அமைவது
குறித்து நடத்தப்படும் இந்தக் கருத்து வாக்கெடுப்பைக் கண்காணிப்பதற்குப் பல கிறிஸ்தவ
சபைகளை உள்ளடக்கிய குழு ஈடுபட்டுள்ளது. இந்தக் குழுவில் ஒருவராகச் செயல்படுகிறார் தென்னாப்ரிக்காவின்
டர்பன் பேராயர் கர்தினால் நாப்பியெர். இந்தக் குழுவில் ஆப்ரிக்காவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும்
பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், இந்தப் பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு
அமைதியான முறையில் நடைபெற செபிக்குமாறு சூடான் கிறிஸ்தவர்கள் உலகினருக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.