2011-01-08 14:38:50

திருத்தந்தை : 21 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு


சன.08,2011. இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவான இஞ்ஞாயிறன்று 21 குழந்தைகளுக்குத் திருமுழுக்குத் திருவருட்சாதனத்தை வழங்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்குத் திருப்பலியைத் தொடங்கும் திருத்தந்தை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 குழந்தைகளுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

ஆண்டு தோறும் இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவன்று திருத்தந்தை திருமுழுக்குத் திருவருட்சாதனத்தை வழங்குவது வழக்கம்.








All the contents on this site are copyrighted ©.