I இறைவாக்கினர் எசாயா 42: 1-4, 6-7 II திருத்தூதர்
பணி 10: 34-38 மத்தேயு 3: 13-17அதன்பின்
இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெற, கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான்,
“நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று
கூறித் தடுத்தார். இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும்
நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார். இயேசு
திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின்
ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த
மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல்
கேட்டது.