சன.07,2011. ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப்
பகுதி மக்கள், அப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாகத் தொடர்ந்து கஷ்டங்களை
எதிர்நோக்குகின்றனர் என்று தலத்திருச்சபை அறிவித்தது.
நிவாரண உதவிகளின்றி மூன்று
இலட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள னர் என்று கூறும் மட்டக்களப்பு குரு
ஜூடு ஜான்சன், தனது கல்முனைப் பங்கில் சுமார் 80 விழுக்காட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்றார்.
இலங்கையில் பெய்த கனமழையால் அந்நாட்டின் பெரிய நதியான மஹாவேலி கரைபுரண்டு
ஓடியதில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கின