நைஜீரியாவில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு அந்நாட்டு அரசுத்தலைவருக்குப்
பேராயர் அழைப்பு
சன.06,2011. நைஜீரியாவில் காணப்படும் பாதுகாப்பற்ற நிலைகளைக் களைவதற்கு உறுதியான நடவடிக்கைகளை
எடுக்குமாறு அந்நாட்டு அரசுத்தலைவர் Goodluck Jonathan க்கு அழைப்பு விடுத்துள்ளார் Abuja
பேராயர் John Olorunfemi Onaiyekan.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் அபுஜா
நகரில் இந்த டிசம்பர் 31ம் தேதியும் அதற்கு முன்னரும் இடம் பெற்ற வன்முறைகள் குறித்து
நிருபர்களிடம் பேசிய பேராயர் Onaiyekan, தற்சமயம் கடும் நடவடிக்கைகள் தைரியமாக எடுக்கப்பட
வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.
அரசியல் குற்ற விவகாரங்களினின்று பிரிந்து
நிற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்