2011-01-06 15:19:56

இறைவார்த்தை உண்மையான விண்மீன் : திருத்தந்தை


சன.06,2011. இறைவார்த்தை உண்மையான விண்மீன், அது உண்மையின் ஒளியை நமக்குக் காட்டுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இவ்வியாழனன்று புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருகாட்சித் திருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை, இவ்விழாவோடு தொடர்புடைய மூன்று ஞானிகள், விண்மீன், மன்னன் ஏரோது ஆகியோர் நமக்கு முன்வைக்கும் பாடங்களை விளக்கினார்

இந்த ஞானிகள் வானயில் பற்றிய ஞானத்தைக் கொண்டிருந்தார்கள், ஆனால் எதிர்கால விண்மீன்கள் பற்றி ஆராயவி்ல்லை என்றுரைத்த அவர், உண்மையான ஒளியைத் தேடும் மாந்தர் வாழ்வுக்கு வழிகாட்டும் பாதையைக் கண்டு கொள்கிறார்கள் என்றார்.

நாம் நமது மனங்களில் எதிர்ப்பு மனப்பான்மையைக் கைவிட்டு கடவுளால் வழிநடத்தப்படுவதற்கு நம்மைக் கையளிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

படைப்பு கடவுளின் கையெழுத்தாக இருக்கின்றது என்றும் மனிதன் படைப்பில் கடவுளைக் காண வேண்டும் என்றும் அவர் கூறினார்







All the contents on this site are copyrighted ©.