இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இளம் சிலே மாணவர்கள் கிறிஸ்துவை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
சன.06,2011. தென் அமெரிக்க நாடான சிலேயில் 55 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கு
மேற்பட்ட இளம் மாணவர்கள் கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தியாகோ நகரில் நடை பெற்று வரும் தேசிய மறைப்பணிக்
கருத்தரங்கில் கலந்து கொள்ளும் இம்மாணவர்கள், சிலே நாட்டில் கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்கும்
பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாதிரியான முயற்சி முதன் முதலில் 2004ம் ஆண்டு சந்தியாகோ
பாப்பிறை கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது