2011-01-04 14:29:35

நாடோடி இன மக்களோடு சேர்ந்து செபித்ததற்காக ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் தாக்கப்பட்டுள்ளார்


சன.04,2011. தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் நாடோடி இன மக்களோடு சேர்ந்து செபித்ததற்காக ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் இந்து மதத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

Global Council of Indian Christians (GCIC) என்ற சபையின் தலைவரான 40 வயதாகும் சாமுவேல் ஐசக் என்பவர் வெட்டுக்கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Davangere மாவட்டத்தில் புத்தாண்டு நிகழ்வின் ஒரு கட்டமாக இஞ்ஞாயிறன்று சில நாடோடி இன மக்களோடு ஒரு கூடாரத்தில் செபித்துக் கொண்டிருந்த போது இவர் தாக்கப்பட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.