2010-12-30 14:48:09

அனைத்து நாடுகளின் திருவழிபாட்டுப் பாடகர் அமைப்புடன் திருத்தந்தை சந்திப்பு


டிச.30, 2010. அன்பின் பாடல் கொண்டு இறைபுகழ் இசைக்க ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் இயற்கையான ஆவலுக்குக் குரல் கொடுப்பவர்களாக திருவழிபாட்டுப் பாடகர்குழுவினர் உள்ளனர் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருப்பீடத்தின் அனைத்து நாடுகளின் திருவழிபாட்டுப் பாடகர் அமைப்பை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்துபோது, திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

உரோம் நகரில் இடம்பெற்ற பாடகர் குழுவின் 36வது அனைத்து நாடுகளின் கருத்தரங்கில் கலந்து கொண்டோருக்கு உரையாற்றிய பாப்பிறை, பாடுதல் என்பது மகிழ்வு மற்றும் அன்பின் வெளிப்பாடு என்ற புனித அகஸ்தினாரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.

இறைவனுடன் மனித ஆன்மா கொள்ளும் அன்பு சந்திப்பின்போது வெளிப்படும் மகிழ்வை எடுத்துரைக்க வார்த்தைகள் கிட்டுவது கடினம் என்றும், இசை மூலம் இறை அன்பின் மறையுண்மையை ஓரளவு வெளிப்படுத்தலாம் என்றும் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.