2010-12-29 14:59:12

இலங்கை-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு


டிச.29, 2010. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் தற்போது நடைமுறையிலுள்ள பாதுகாப்புத் தொடர்பான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இருநாடுகளும் இணங்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமாருக்கும், இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் (Gotabhaya Rajapaksa) இடையில் இச்செவ்வாயன்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் பயணமாக இந்திய பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் இலங்கை சென்றுள்ளார்.
இருநாட்டு பாதுகாப்பு உறவுகளில் குறிப்பாக பயிற்சி மற்றும் இருதரப்பு சேவைகளில் பரிமாற்றங்களை மேற்கொண்டு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இணங்கியுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.