2010-12-29 14:59:03

அமைதிக்கான நொபெல் பரிசு பெற்ற Liu Xiaobo சீனச்சிறையில் 55வது பிறந்த நாள்


டிச.29, 2010. அமைதிக்கான நொபெல் பரிசு பெற்ற சீனாவைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் Liu Xiaobo இச்செவ்வாயன்று தன் 55வது பிறந்த நாளை சீனாவில் உள்ள Jinzhou சிறையில் செலவிட்டார்.

அமைதிக்கான நொபெல் பரிசுக்கென Liu வின் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து, உலகின் பல நாடுகளிலிருந்தும் அவரை விடுவிக்க சீன அரசுக்கு நிர்ப்பந்தங்கள் ஏற்பட்ட போதும், சீன அரசு தன் முடிவிலிருந்து சற்றும் மாறாமல் உள்ளது.

இம்மாதம் 16ம் தேதி முதல் Liuவைச் சந்திக்க அவரது குடும்பத்தினரும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.


ஹாங்காங்கில் உள்ள சீன மனித உரிமைகள் காப்போர் அமைப்பு உட்பட உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் பலவும் Liuவின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்தும் அவரை விடுவிக்கக் கோரி சீன அரசுக்கு விண்ணப்பங்களும் கூறியுள்ளன.







All the contents on this site are copyrighted ©.