2010-12-28 15:34:49

திருச்சபையின் திருவழிபாடுகளில் கிறிஸ்துவின் குரலையும் நன்றாகக் கேட்க முடியும் - கர்தினால் ரைல்கோ


டிச.28,2010.திருச்சபையின் திருவழிபாடுகளில் கிறிஸ்துவின் குரலையும் நமக்கான அவரது இதயத் துடிப்பையும் நன்றாகக் கேட்க முடியும் என்று திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ரில்கோ கூறினார்.

உரோமில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள, Pueri Cantores என்ற சர்வதேச திருஇசைப் பாடகர் குழுவின் கூட்டமைப்பின் 36வது கூட்டத்திற்குச் செய்தி அனுப்பிய கர்தினால் ரில்கோ, இந்தப் பாடகர்களின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தச் சர்வதேச கூட்டமைப்பின் கூட்டம் இச்சனிக்கிழமையன்று நிறைவடையும். கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போர்த்துக்கல், உக்ரெய்ன், அமெரிக்க ஐக்கிய நாடு, அயர்லாந்து, சுவீடன், போலந்து பெல்ஜியம், ஆஸ்ட்ரியா, ஸ்பெயின் எனப் பல நாடுகள் அங்கம் வகிக்கும் இக்கூட்டமைப்பில் மூவாயிரம் பாடகர்களும் 96 திருஇசைக் குழுக்களும் உள்ளனர்.

பாடுவது இறைவனை வழிபடுவதன் கருவியாக அமைய முடியும் என்ற ஆழமான கிறிஸ்தவ எண்ணத்தின் அடிப்படையில் இக்கூட்டமைப்பு இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.