கர்தினால் ஐவன் டயஸ் Jesus Youth இயக்க வெள்ளி விழாவைத் தொடங்கி வைக்கிறார்
டிச.28,2010. Jesus Youth (JY) என்ற அனைத்துலக கத்தோலிக்க இளையோர் அருங்கொடை இயக்கத்தின்
வெள்ளி விழா நிகழ்ச்சிகளை இச்செவ்வாய் மாலை கேரளாவில் தொடங்கி வைக்கிறார் திருப்பீட விசுவாசப்
பரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஐவன் டயஸ்.
கேரளாவின் கொச்சியில் நடைபெறும்
இந்த ஐந்து நாள் அருங்கொடை மாநாட்டில் 29 நாடுகளிலிருந்து சுமார் 20,100 பிரதிநிதிகள்
கலந்து கொள்வார்கள் என்று இவ்வியக்கத்தின் தலைவர் ஜார்ஜ் தேவசி கூறினார்.
கல்லூரி
மாணவர்களுக்காக இயேசு சபையினர் நடத்தும் அனைத்திந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக கூட்டமைப்பின்
முன்னாள் உறுப்பினர்களால் இவ்வியக்கம் கேரளாவில் தொடங்கப்பட்டது. இதற்கு Jesus Youth
என்று 1985ம் ஆண்டில் பெயரிடப்பட்டது. இவ்வியக்கத்தில் தற்சமயம் உலகெங்கிலுமிருந்து சுமார்
ஐம்பதாயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இயேசு தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றினார்
என்பது பற்றியும் தாங்கள் மறைப்பணிகளைச் செய்து வரும் விதம் பற்றியும் இம்மாநாட்டில்
இளையோர் பகிர்ந்து கொள்வார்கள் என்று இதன் ஆன்மீக இயக்குனர் அருட்திரு தாமஸ் தரயில் கூறினார்